×

கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

மேடடூர், பிப்.7: கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில், புதுச்சாம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நீட் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுச்சாம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்க கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள், நீட் தேர்வுக்கான பொது அறிவு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. மேலும், வகுப்புகள் வாரியாக கடந்த ஆண்டு முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆலையின் சீனியர் துணைத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினார். பள்ளி நூலகத்திற்கு ஏராளமான புத்தகங்களும், பந்து, பூப்பந்து மட்டை, கிரிக்கெட்  மட்டை, ரிங்பால் உள்ளிட்டவிளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் புதுச்சாம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராஜா விமல்குமார், குமரன், புதுச்சாம்பள்ளி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, அங்கன்வாடி மேற்பார்வையாளர் சரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Kemplast Sunmar Institute ,
× RELATED கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம்...